உன்இதழ்கள் என்பெயரை உச்சரிக்கும்போது
அதுஇன்னும் இனிப்பாக ஒலிக்கின்றது
கன்னியுந்தன் கூர்விழியை பார்த்திடும்போது
குளிர்ஜுரம்போல் விட்டுவிட்டு அடிக்கின்றது
கனவில்கூட உன்னிடையை தழுவும்போது
காலின்கீழ் உள்ளநிலம் நழுவுகின்றது
நனவிலும் உன்னினைப்பு வந்திடும்போது
என்கையே என்தோளை தழுவுகின்றது
திமிர்பிடித்த இளமையிடம் பயந்தோவுந்தன்
துப்பட்டா ஒதுங்கியே ஓரம்போனது
அமைதியான என்நெஞ்சில் புயலடித்தது
என்னுடலும் வியர்வையிலே ஈரமானது
உதடுகளை சுழித்துநீ கடித்திடும்போது
உன்மத்தம் உச்சந்தலை ஏறுகின்றது
இதற்குமேல் தயங்காதே என்றேயெந்தன்
உள்ளிருக்கும் சைத்தானும் கூறுகின்றது
காமத்தின் வசப்பட்ட காதல்நெஞ்சம்
காலண்டர் தாள்போல படபடக்குது
ஆமெனும் ஒருசொல்லை கேட்டிடவேயென்
ஒட்டுமொத்த உயிரணுக்கள் துடிதுடிக்குது
No comments:
Post a Comment