Tuesday, January 21, 2014

தீண்ட மறுத்த தென்றல்


உன் கரம்பற்றி நான் நிற்கையிலே
என் கால் முத்தமிட்டுச் செல்லும் அலைகள்
நீ இல்லாததால்
என்னைக்கண்டு ஒதுங்குகின்றன

நிலவை விடுத்து
நம்மைப்பார்த்து கண்சிமிட்டிய
நட்சத்திரங்கள்
நீ இல்லாததால்
முகம் திருப்பிக் கொள்கின்றன

தன் களங்கத்தை மறந்து
பளீரிட்ட நிலாவோ
முகத்தில் திரையிட்டுக்கொண்டு
மறைந்து நிற்கின்றது.

ஸ்னேகமாய் சிரித்துச் செல்லும்
நண்டு கூட இன்று
சீற்றத்துடன் பார்க்கிறது.

அன்பே என் அருகில்
நீ இல்லாததால்
தென்றல் கூட என்னை

தீண்ட மறுக்கிறது

No comments:

Post a Comment