Tuesday, January 21, 2014

மாற்றம்

  
நான் சிரிக்கும் சிரிப்பெல்லாம்
புன் சிரிப்புமில்லை
நடக்கும் பாதைகளில் முட்களுண்டு
ரோஜா விரிப்புமில்லை

நான் சிந்தும் கண்ணீரின்
நிறமுணர்ந்து கொள்ளுங்கள்
மனமுடைந்தா மகிழ்வுடனா
தரமுணர்ந்து கொள்ளுங்கள்

காதலிப்பதுதான்
கடினமென நினைத்திருந்தேன்
வெறுப்பது அதனினும்
கடினமென இன்றுணர்ந்தேன்

நான் சிரிக்கும் சிரிப்பெல்லாம்
புன் சிரிப்புமில்லை
நடக்கும் பாதைகளில் முட்களுண்டு
ரோஜா விரிப்புமில்லை

முகங்களும் அதுவே வாய்பேசும்
மொழிகளும் அதுவே
அகத்தில்தான் ஏதோ
மாற்றங்கள் மெதுவே

நேற்று போல்தான் இன்றும்
பொழுது விடிந்தது
விடியும் போதே என்கண்ணில்
கண்ணீர் வடிந்தது

என்ன நெஞ்சமடா இது
நினைவுகளுடன் வாழத் துடிக்கிறது
என்நிழலும் எனைவிட்டகன்றும்
நேற்றைய திரைப்படம் நடக்கிறது

நான் சிரிக்கும் சிரிப்பெல்லாம்
புன் சிரிப்புமில்லை
நடக்கும் பாதைகளில் முட்களுண்டு
ரோஜா விரிப்புமில்லை



No comments:

Post a Comment